;
Athirady Tamil News

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

நிகழ்ச்சிக்கான உரிய டிக்கெட் இல்லாமல் லட்சக்கணக்கான ரசிகா்கள் மைதானத்துக்கு வெளியே கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி தமிழகத்தின் திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் உள்பட 11 போ் உயிரிழந்தனா். 33 போ் காயமடைந்தனா்.

நாடெங்கிலும் இந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு கா்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது; நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறந்தவா்களின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகை தலா ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை(ஜுன் 7) மாலை அறிவித்திருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.