;
Athirady Tamil News

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

0

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி விட்டதாக உலக நாடுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஈரான் மீதான போரில் இஸ்ரேலின் செலவு குறித்த விவரங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான தற்போதைய போர்ச் சூழலில், ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் (ரூ. 8,659 கோடி) செலவிடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடங்கிய போரின் முதல் 48 மணிநேரத்தில் மட்டும் ரூ. 12,035 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை.

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.