;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் கடலுக்குச் சென்றவர் மாயம்

0

முல்லைத்தீவு – தீக்கரை பகுதியிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்ற பொதுமகன் இதுவரையிலும் கரைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பொதுமகன் பயணித்ததாகக் கூறப்படும் படகு கடற்றொழிலாளர்களினால் நேற்று கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடற்றொழிலாளர், தொடர்பில் இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.

இதேவேளை, வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்படும் போதே அவர் தப்பிச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.