;
Athirady Tamil News

வியத்நாம்: 8 குற்றங்களுக்கு மரண தண்டனை நீக்கம்

0

வியத்நாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத் சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலில் இருந்து எட்டு குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, போலி மருந்துகள் விற்பனை, போரைத் தொடங்குவது, உளவு, போதைப் பொருள் கடத்தல், வருவாய்க்கு மீறி சொத்து குவிப்பு, லஞ்சம் பெறுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு இனி மரண தண்டனை விதிக்கமுடியாது.இந்த சட்ட சீா்திருத்தம் காரணமாக வியத்நாமில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள பல முக்கிய தொழிலதிபா்கள் அதிலிருந்து தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.