;
Athirady Tamil News

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல்கள்; விசேட விசாரணை குழு

0

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிவதற்காக விசேட விசாரணை குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2010 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம். காமினி விஜேசிங்க தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை நடத்தி செல்வதற்கு அரசுக்கு அதிக செலவுச்சுமை நேரிட்டுள்ளமையால், ஆண்டுதோறும் ஏற்படுகின்ற அதிக நட்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத சுழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.