இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (07.07.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா ஒருவருக்கு ரூபா 90,000
வீதம் சாவகச்சேரி, நல்லூர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய 05 குடும்பங்களைச் சேர்ந்த எட்டுப் பேருக்குமாக ரூபா 720,000.00 கொடுப்பனவு வழங்கப்பட்டது.

