;
Athirady Tamil News

திடீரென தீயில் எரிந்து நாசமான சிற்றுண்டி கடை ; தமிழர் பகுதியில் சம்பவம்

0

சிற்றுண்டி கடையொன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தச் சம்பவம் திருகோணமலை – கந்தளாய் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையொன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள், வீதியால் பயணித்த மக்கள் என ஒன்றிணைந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த கந்தளாய் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.