;
Athirady Tamil News

உலக சாதனை படைக்க காத்திருக்கும் இலங்கையின் புதிய கட்டிடம்!

0

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய க்ளோத்ஸ் பின் டவர்ஸ்(Clothes pin Towers) திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்தத் திட்டம் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.

லண்டனில் உள்ள பிக் பென்னை விட பெரிய கடிகாரத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அங்கு 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரமாண்டமான கடிகாரம் கட்டப்பட உள்ளது.

இந்த மேம்பாட்டுத் திட்டம் 24,324 சதுர மீட்டரில் மேற்கொள்ளப்படும். இதற்காக 280 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.