;
Athirady Tamil News

காப்புறுதி பணத்துக்காக கால்களை அகற்றிய வைத்தியரால் அதிர்ச்சி

0

பிரிட்டனில் உள்ள வைத்தியர் ஒருவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

5 இலட்சம் பவுண்டுகள் (5.4 கோடி ரூபாய்) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காப்பீட்டுத் தொகை
நீல் ஹாப்பர் (49) என்ற வைத்தியர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பிரீமியம் வீடியோக்களை சமூக வலைத்தளத்திலில் பார்வையிட்டது தெரியவந்துள்ளது.

அவற்றின் அடிப்படையில், அவர் மற்றொரு வைத்தியரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றியுள்ளார்.

தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.