;
Athirady Tamil News

யாழ். கொழும்பு தொடருந்தில் கோளாறு; அந்தரித்த பயணிகள்

0

யாழ்ப்பாணம் – கொழும்பு இரவுநேர அஞ்சல் தொடருந்தின் இயந்திரம் செயலிழந்தமையால், பயணிகள் சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நேற்று இரவு காங்கேசன்துறையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு 8:30 மணியளவில் யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தை அடைந்து பின்னர் கொழும்பு நோக்கித் சேவையை ஆரம்பித்திருந்தது.

மூன்று மணித்தியாலங்கள் தவித்த பயணிகள்
இந்நிலையில் பரந்தன் – கிளிநொச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் இயந்திரம் செயலிழந்தது.

இதன் காரணமாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை பயணிகள் காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாலை 12:30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வருகை தந்த மற்றுமொரு இயந்திரம் மூலம் தொடருந்து, கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.