தொண்டைமானாறு ஆற்றில் பெண்ணின் சடலம்; உயிரிழந்தது யார்?
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று (12) மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.