;
Athirady Tamil News

கொழும்பில் வேனில் இருந்து 10 மில்லியன் ரூபா மாயம்; திகைப்பில் நிறுவனம்

0

கொழும்பில் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பணப் பையில் 13,96,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகின்றது.

காணாமல் போன பணப் பை
மாயமான பணத்தில் 10,000,000 ரூபாய் செல்லுபடியாகும் நாணயம், 6,000 ரூபாய் சேதமடைந்த நாணயங்கள் மற்றும் 3,90,000 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வேனில் 15 பைகள் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவற்றில் 14 பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.