இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரம் ; வாய்த்தர்க்கத்தால் வந்த வினை
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த நபர் அம்பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.