;
Athirady Tamil News

பேச்சுவார்த்தையில் புடின்-டிரம்ப்: மக்களை கொன்று குவிப்பதாக ஜெலென்ஸ்கி காட்டம்!

0

உக்ரைனில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தையில் புடின்-டிரம்ப்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் இன்று அலஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்தை கடந்து நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் தொடர்பான நல்ல முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா
அதில், ரஷ்யா இன்னும் மக்களை கொன்று குவித்து வருகிறது, இதன் மூலம் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என தெரிகிறது.

பேச்சுவார்த்தை நாளில் கூட அவர்கள் மக்களை கொலை செய்கிறார்கள், அவர்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லை என வெள்ளிக்கிழமை வெளியிட்ட உரையில் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.