மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 6 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு இழப்பீடு பெற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.