;
Athirady Tamil News

மைதானத்திலிருந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு ; சிக்கிய துப்பாக்கிதாரி

0

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் 5 இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் மறைந்திருந்த போது கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.