;
Athirady Tamil News

அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.