;
Athirady Tamil News

வாய்க்காலில் விழுந்த முச்சக்கர வண்டி – சாரதி வைத்தியசாலையில் அனுமதி

0

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (03) புதன்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.