வாவியில் நீராடிய நபர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழப்பு
வாவியில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் இணைந்து நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.