;
Athirady Tamil News

யாழ் . பொது நூலகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மரநடுகை

0

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும் விஞ்ஞானி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் இந்தியன் கோனர் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாமின் திருவுருவ சிலைக்கு இன்றைய தினம் புதன்கிழமை மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் , வடமாகாண செயலாளர் , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , பொது நூலக நூலகர்கள் , நூலக உத்தியோகஸ்தர்கள் , வாசகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.