;
Athirady Tamil News

ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை சரிவு; நகைப்பிரியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி!

0

இலங்கையில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிற்பகலில் மேலும் குறைந்த தங்கம் விலை
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 350,000 ரூபாவாக குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் பவுன் ஒன்றின் விலை 340,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 322,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் பவுன் ஒன்று 312,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது.

அதேவேளை கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த 24 கரட் தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.