51 ஆவது கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராஷிக், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(24.10.2025) மு. ப. 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பிரதம கணக்காளர் ,திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர் ஆகியோரும் உடனிருந்தார்கள்.



