நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர் உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மாலை 04 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று ஆறுமுக பெருமான் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்தார்.
சூரன் போர் உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு , ஆறுமுக பெருமானை வழிபட்டனர்.




படங்கள் – ஐ. சிவசாந்தன்