;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு ; அதிரடி காட்டிய நீதிமன்றம்

0

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள கோவிலின் தலைமை துறவியான 70 வயதானவரே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை
மெல்பர்னில் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தேரர் பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியை துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.