வலி மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.
சபை அமர்வின் இறுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


