;
Athirady Tamil News

ஒரே நிபந்தனையால் அமைதி திட்டத்தை குழப்பிய புடின்

0

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட டான்பாஸ் உள்ளிட்ட கிழக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புடின் நிபந்தனை விதித்துள்ளாா்.

போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை அவா் வரவேற்றாலும், அவரின் இந்த நிபந்தனை அத்திட்டத்தின் வெற்றி குறித்த நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

போர் முடிவு
இது குறித்து புடின் கூறியதாவது:

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள திட்டம், அமைதி குறித்த விவாதத்துக்கான தொடக்கப் புள்ளி. எனவே, அது போரை நிறுத்தலாம்.

இருந்தாலும், போா் ஓய வேண்டுமென்றால் உக்ரைன் ‘ஆக்கிரமித்துள்ள’ கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியப் பகுதிகளில் இருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேற வேண்டும். இல்லையென்றால் ராணுவ ரீதியில் அவற்றை நாங்கள் மீட்டெடுப்போம் என்றாா் புதின்.

இந்த அமைதி திட்டம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் ரஷ்யா வரவுள்ளாா்.

அதற்கு முன்னதாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் வெளியேறினால்தான் போா் ஓயும் என்று புடின் கூறியுள்ளது அமரிக்காவின் அமைதி திட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதை மேலும் சிக்கலாக்கும் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.