;
Athirady Tamil News

கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி

0

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு
கொச்சிக்கடை ஓயா வீதியைச் சேர்ந்த சின்னையா பாக்கியம் என்ற 77 வயது பெண்மணியும், பள்ளியா வீதியைச் சேர்ந்த ஏ.எச். ஸ்ரீ நமன் என்ற 55 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேவேளை வயதான பெண் வீட்டினுள் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துளார்.

மற்றைய நபரை கவனித்துக் கொள்ள இருந்த நபர் வெளியே சென்ற வேளையில் தனியாக இருந்த நபர் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.