;
Athirady Tamil News

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

0

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய நேபாளத்தின் கந்தகி மாகாணத்தின் மானாங்க் மாவட்டத்தில் இன்று பகல் 12.54 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மானாங்க் மாவட்டத்தையொட்டியுள்ள கஸ்கி, லம்ஜங் மற்றும் முஸ்தங்க் மாவட்டப் பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களைப் பற்றிய விரிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.