;
Athirady Tamil News

யாழில். 200 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார் , வீட்டினுள் இருந்து பெருந்தொகை கஞ்சா பொதிகளை கைப்பறியுள்ளனர்.

அதனை அடுத்து , வீட்டில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 200 கிலோ என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.