கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய: மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் இரணைமடு குளத்தின் நிலைமைகள் குறித்து ஆய்வு
கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன குளமான இரணைமடுவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நிலமைகளை பார்வையிட்டதோடு அனர்த்த நிலமையில் கையாளப்பட்ட நீர் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.


