;
Athirady Tamil News

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் விபத்து ; இருவர் படுகாயம்

0

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.