;
Athirady Tamil News

காலி சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல் மோதல்

0

காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.