பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், வீட்டிற்குள் கோடரியால் தாக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்த்திருந்த தம்பல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாத்திமா நஷிமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி, அவர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அயல் வீட்டில் வசிக்கும் 26 வயது இளைஞர் ஒருவர் அவரை கோடரியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடரியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, இன்று பொலன்னறுவை மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.