;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது! ஈரான் அதிரடி!

0

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், ஈரான் பாதுகாப்புத் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலை குவைத்தில் அமெரிக்க எஃப்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் அமெரிக்க எஃப்-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விடியோவையும் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சியை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

அதேபோல, ”ஈரான் ராணுவம் போரை கைவிட்டு சரணடைய வேண்டும், இல்லையென்றால் அதிக பலியை சந்திக்க நேரிடும். ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எந்தச் சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என்று ஈரான் பாதுகாப்புத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.