;
Athirady Tamil News

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

0

ஹெஸ்பொல்லா இஸ்ரேலைத் தாக்கிய நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துகிறது. லெபான் மீது இன்னும் தீவிரமான தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு லெபனானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், குவைத் தொடர்ந்து தாக்குதலை எதிர்கொண்டதால், அங்குள்ள அமெரிக்கர்கள் வீட்டிற்குள் இருக்குமாறும், மேலும், அவர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீதான போர் பதற்றத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. காஷ்மீரில் அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனிடையே கர்நாடகத்தில் அயதுல்லா கமேனி வருகை தந்த கிராமத்தில் மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈரான் மீது தாக்குதல் ஏன்?

ஈரான், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 28ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி இருந்தன.

இந்த தாக்குதலின்போது, தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேலி பலியானார்.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தியிருந்ததால் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.