;
Athirady Tamil News

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுக… அமெரிக்கா உத்தரவு!

0

மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 14 நாடுகளில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.