;
Athirady Tamil News

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்?

0

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,அலி காமெனியின் 2வது மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக யார் தேர்வு செய்யப்படாலும் அவரையும் அழித்தொழிப்போம் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அறிவித்தது.

மொஜ்தபா கமேனி காயமா?
இந்நிலையில், வான்வழி தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அரசு ஊடகம் அவரை “ரமலானின் ஜான்பாஸ்” (Jaanbaz of Ramadan) என்று குறிப்பிட்டுள்ளது.

இது நாட்டிற்கு சேவை செய்யும் போது காயமடைந்த ஒருவரை விவரிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகும்.

மொஜ்தபா தனது தலைமை அறிவிக்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும், அதற்கு பதிலாக நிகழ்வின் போது காட்டப்பட்ட ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் ஈரானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

மொஜ்தபா தனது தலைமை அறிவிக்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவரது காயத்தின் தீவிரம் குறித்து கவலை எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.