கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது – யாழில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் தெரிவிப்பு
கிராமிய வறுமையை ஒழித்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தற்கான விழிப்புணர்வு கலந்துரையாடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராமிய
வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது எனவும், ஜனாதிபதியின் எண்ணக்கருவான “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்பதற்கு இணங்க, நாட்டை வளமான நாடாக மாற்ற முதலில் கிராமங்களை வளமாக்க வேண்டும் எனவும், நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் வாழ்வை விரிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இலங்கையிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதுவரை காணப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை விட இது மாறுபட்ட திட்டமாக காணப்படுவதாகவும், இத் திட்டத்தின் ஆரம்பமும் முடிவும் மக்களாகவே இருக்க வேண்டும். மக்களே முதன்மையாக இருப்பதால் நிகழ்ச்சித் திட்டம் உயிர்ப்புடன் இருப்பதுடன், இறுதியாக அதன் பலன்கள் மக்களையே சென்றடைய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கிராமிய மக்களின் வறுமையை அடையாளம் கண்டு எவ்வாறு அவர்களின் வாழ்வை மீட்க முடியும் எனவும் அதற்கான தீர்வு கிடைக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதுடன் மூலம் நாட்டின் வறுமை இல்லாது ஒழிப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.