;
Athirady Tamil News

எரிபொருள் நெருக்கடி – அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

0

தெரிவு செய்யப்பட்ட சில அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு தரப்பினரிடமிருந்து இது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டார தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி
இந்த நிலையிலேயே எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும் நோக்கில் இந்த திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுமன ஆலோக்க பண்டார மேலும் கூறுகையில், எரிசக்தி நெருக்கடி ஏற்படும் காலங்களில் உலகின் பல நாடுகளும் இத்தகைய வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவது வழமையாகும்.

இலங்கையிலும் கடந்த கோவிட் தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பான தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.