இரவில் நேர்ந்த தீ விபத்து ; பல ஏக்கர் வயல்வெளி நாசம்
பண்டாரகமவின் கல்தூடே மரகாஸ் சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நெல் வயலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல ஏக்கர் பரப்பளவுள்ள, ஆள் நடமாற்றமில்லாத ஒரு வயல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டது.
களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறையினரும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோதிலும், தீ விபத்து ஏற்பட்ட இடத்தை சென்றடைய முடியவில்லை.
இருப்பினும், தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையுடன், மக்கள் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தனர்.