;
Athirady Tamil News

இலங்கையில் ஒன்லைன் முறைக்கு மாறும் மற்றொரு சேவை

0

அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு இன்று (31) முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இது குறித்துத் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டமைப்பு
இன்று முதல் சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும், இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாகவே தமது விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பழைய முறையிலான ஆவணச் சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய அனைத்து தரப்பு அதிகாரிகளும் இந்தப் புதிய இணையத்தளக் கட்டமைப்பின் ஊடாகவே தமது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.