;
Athirady Tamil News

கரும் புகை வெளியிட்டால் கடும் சட்ட நடவடிக்கை

0

பொது வீதிகளில் இயங்கும்போது அதிகப்படியான கரும் புகையை வெளியிடும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வாகனங்கள் குறித்து பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இறப்புகள் பதிவாகும் நிலையில், காற்று மாசுபாடு தீவிரமான உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீதிகளில் அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டால் அதுகுறித்து தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, 0703500525 எனும் பிரத்யே வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன எண் அல்லது வீடியோ க்ளிப்பை அனுப்பி முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.