நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!
துருக்கியில் இருந்து வந்த விமானம் நேபாளத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்துக்கு வந்த துருக்கி ஏர்லைன் விமானம்(டிகே 726) காத்மாண்டு விமான நிலையத்தில் இன்று காலை 6.45 மணிக்கு தரையிறங்கியபோது திடீரென விமானத்தின் டயரில் தீ பிடித்தது.
இந்த விமானத்தில் 277 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 11 ஊழியர்கள் என மொத்தம் 288 பேர் பயணித்துள்ளனர்.
விமானத்தின் டயரில் தீ பற்றியதையடுத்து உடனடியாக விமானத்தில் உள்ள அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் எமெர்ஜன்சி கதவுகள் வழியாக பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் லேசான காயத்துடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசரகால நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் இதில் பயணித்துளினது குறிப்பிடத்தக்கது.