;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா: யாழ். மாநகர சபையிடம் பாரம்பரிய முறைப்படி பட்டோலை கையளிப்பு!

0

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்கு பிள்ளையால் கையளிக்கப்பட்டது.

அதனை யாழ். மாநகர முதல்வர் வி. மதிவதனி மற்றும் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வு பாரம்பரிய முறைப்படி பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா செப்டெம்பர் 09ஆம் திகதியும் மறுநாள் 10ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.