;
Athirady Tamil News

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

0

கிரிந்த கடலில் பாடசாலை அதிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிரிந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர் கல்விச் சுற்றுலாவுக்காக கிரிந்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.இதனை அவதானித்த பாடசாலை அதிபர், அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காக கடலில் நீந்திச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
எனினும், அதிபர் மற்றும் மாணவி ஆகிய இருவரும் கடலில் மூழ்கியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையின் உயிர்காப்புப் பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு, மாலை 5 மணியளவில் தெபரவெவ ஆதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிபர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.