;
Athirady Tamil News

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு!! (படங்கள்)

0

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக காலியில் கடந்த 2 நாட்களாக தொடர் ஆரப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொலிஸாரால் அகற்றப்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களின் கூடாரங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பகுதிக்கு கோட்டாகோகம காலி கிளை என ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயரிடப்பட்டுள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பொலிஸார் இன்று காலை அகற்றிச் சென்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டத்தரணிகள் அப்பிராந்தியத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸாரால் அகற்றிச் செல்லப்பட்ட, கூடாரங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.