;
Athirady Tamil News

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, தனது கழுத்தில் பதாகையொன்றை கொளுவிக்கொண்டு, அம்பலாங்கொட நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்துக்கும் தேவானந்த வித்தியாலயத்துக்கும் இடையில் நேற்று (24) பிக் மெச் இடம்பெற்றது. அதனை பார்வையிடுவதற்கு மஹிந்த தேசப்பிரிய வந்திருந்தார்.

அதன்பின்னரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.