அலரிமாளிகை முன்பாக பதற்றம் !!

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதை அடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் பலகையை ஆர்ப்பாட்டக்காரர் வைக்க முயற்சித்த போதே, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.