;
Athirady Tamil News

விபத்தில் ஒருவர் பலி!!

0

புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மினுவான்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு ஆனமடுவ குருபொக்குனகம பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் நடந்து பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், வீதியில் நடந்து சென்றவரையும் அங்கிரு்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுதித்துள்ளனர்.

எனினும், வீதியில் நடந்து சென்ற நபர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனமடுவ பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.