;
Athirady Tamil News

’மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும்’ !!

0

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால், மின்வெட்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை, நேற்று (03) அறிவித்தது.

தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தால் 5 மணித்தியாலங்களாக மின்வெட்டை நீடிக்க வேண்டும் எனவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.